search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பூஜை"

    • சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது.
    • பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

    கடலூர்:

    திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமிக்கு மக்கள் நலன் பெற வேண்டி பால், தயிர், மஞ்சளால் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. 12 மணி அளவில் மூலவர் சஞ்சீவி ராய பெருமாளுக்கு மகா தீபாரதனை நடந்தது.

    மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட சஞ்சீவி ராய பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்கள் மாவிளக்கு ஏற்றியும், சக்கரை பொங்கல், சுண்டல் வைத்து பெரு மாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

    இதேபோல் திட்டக்குடி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • வெள்ளைக்கரடு மலை கோவில் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி- பூதேவி பெருமாள் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.
    • அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி அலங்க ரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த வெள்ளைக்கரடு மலை கோவில் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி- பூதேவி பெருமாள் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு

    அபிஷேகம் நடை பெற்றது. இதையடுத்து மலர் அலங்கா ரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி அலங்க ரிக்கப்பட்ட தேரில் எழுந்த ருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேளம், தாளம் முழங்க பெண்கள் சீர் தட்டுகளுடன் ஊர்வலமாக வெள்ளாண்டி வலசு, புதுப்பேட்டை, பழைய பேட்டை, நடுத்தெரு வீரப்பம்பாளையம் வழி யாக வந்து கோவிலை அடைந்தனர்.

    தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷ மிட்டனர். அதைத் தொடர்ந்து திம்மராய பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் திம்மராய பெருமாள் கோவிலில் உள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அலங்காரங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது

    விழா ஏற்பாடுகளை 2-ம் சனிக்கிழமை கட்டளை தாரர்கள் மருத்துவர் சமுதா யத்தினர் ராமு பண்டிதர், கிட்டு பண்டிதர், ஞானப்பிரகாசம், சிவப்பிரகாசம், சண்முக சுந்தரம், ஜெய கிருஷ்ணன், சரவண பெருமாள், மதியழகன், ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம், ஆனந்தராஜ், குப்புசாமி, முத்துவேல், காமராஜ், ராஜா, பிரபு, சூர்யா, தாமரைச்செல்வன், விஜயராஜ், சவுந்தர்ராஜன், பூபால கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர் .

    இதே போல் பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் கோவில், மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதி, எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலயம், பூலாம்பட்டி பகுதியில் உள்ள மாட்டு பெருமாள் மலைக்கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் 2-ம் சனிக்கிழ .மையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்களை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கடலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள வேத விநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிறப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் வேத விநாயகர் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. இதேபோல் கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில், மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில், நெல்லிக்குப்பம் கடைத்தெரு வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், மகா தீபார தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு சென்றனர்.

    • கோவில்களில் கிருத்திகையையொட்டி நேற்று முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் கிருத்திகையையொட்டி நேற்று முருகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி தேவகிரி அம்மை உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சாமிகளுக்கு 21 மூலிகைகளால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது
    • விழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தேவகிரி அம்மை உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சாமிகளுக்கு 21 மூலிகைகளால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது

    விழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது. இதில் சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குரு மகா சந்நிதானம் திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம் பரை வாமதேவ ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி அருளாசி வழங்கினார்.

    சிறியவர்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடினர். மேலும் பெண்கள் கோலாட்டம், இளைஞர்கள் புலி வேஷம் உள்ளிட்ட பல்வேறு வேஷம் அணிந்து ஆடி அசத்தினர். இதனை ஏராளமான பக்தர்கள் கரகோஷம் எழுப்பி பார்த்து ரசித்தனர். மேலும் சிவனடியார்கள் கலந்து கொண்டு பல்வேறு வாத்தியங்கள் முழங்க சிவா சிவா என கோஷமிட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை எடப்பாடி சிவமுருகன், கணேசன், சிவனடியார் ஆறுமுகம், அறக்கட்டளை உறுப்பினர்கள் கணேஷ், எடப்பாடி தாவாந்தெரு சிலம்பாட்ட கலைக் குழுவினர், விருத்தாலம், திருச்செங்கோடு, புதுச்சேரி கையிலை வாத்தியக் குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • கடைசி ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் உள்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் அர்ச்சகர்பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் மகளிர் குழு சார்பில் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மேளதாளத்துடன் 4 ரத வீதியும் சுற்றி வந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக கம்பத்தில் அபிஷேகம் செய்தனர். பின்னர் கூழ் வார்த்து பக்தர்களுக்க வழங்கினர்.

    திரவுபதி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், உச்சி காளியம்மன் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில், உச்சி மகா காளியம்மன் கோவில், திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்.
    • அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஸ்ரீ ராம பக்த வீர ஆஞ்சநேயர் கோவிலில் வாராகி அம்மனுக்கு ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு 136 கலச பூஜைகளும், 136 மகாயாக வேள்விகளும், உலக நன்மை வேண்டியும் குடும்ப நலனுக்காகவும் பெண்கள் பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து மகா வாராஹி அம்மனுக்கு மகா அபிஷேகமும் சர்வ அலங்காரத்துடன் மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்.

    அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் இந்த விசேஷ பூஜைகளை ஸ்ரீ ராம பக்த வீர ஆஞ்சநேயர் பக்தர்கள் சபா குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

    • மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
    • இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களி லிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

    சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களி லிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

    இதைப்போலவே பகவதி,காளியம்மன், தில்லைகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • வாசனை திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது,
    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .

    தருமபுரி,

    தருமபுரி ஸ்ரீ கோட்டை கல்யாண காமாட்சி கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், தேன், தயிர் சந்தனம், மஞ்சள், குங்குமம், மற்றும் வாசனை திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது,

    பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .

    ஏராளமான பெண்கள் இந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகள் ஆசியுடன் புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தபட்ட வீரபத்திரர், ராஜ காளியம்மன், மூகாம்பிகை சன்னதிகளு க்கான மண்டலாபிஷேகம் ,ஸ்ரீவித்யா ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளுடன் நிறைவு பெற்றது.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு 3 நாட்களாக நடைபெற்று வரும் நவ சண்டியாகம் இன்று நிறைவு பெறுகிறது. ஆடி மாத பஞ்சமியை முன்னிட்டு நேற்று வராகி ஹோமமும், பஞ்சமுக வராகிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பஞ்சமுக வராகிக்கு தங்க கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார். 

    • ஆடி மாத அமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

    கடலூர்:

    மிகவும் பிரசித்தி பெற்ற திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று (17-ந்தேதி)ஆடி மாதஅமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் பெருமாள் பூவாலங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி சேவை சாதித்தார் இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை 9 மணிக்கு உற்சவர் கண்ணாடி அறை சேவை , 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காக விளக்கேற்றி வழிபாடு செய்தனர் மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பட்டர் ராமன்தலைமையில் விழா குழுவினர், நகரவாசிகள் செய்து வருகின்றனர்.

    • சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
    • காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

    பூஜையில் பல்குதர்கள் குடும்பம் செழிப்படைந்து, கஷ்டங்கள் தீர பஜனை பாடி பைரவருக்கு வழிபாடுகள் செய்து பாலபிஷேகம் உட்பட 16 சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×